Wednesday, July 1, 2009

Beware of DECCAN ENGG

HEY GUYS...
if u got any job selection order frm DECCAN ENGG plz be careful...
its a fraud company n don loose ur money....
many people are cheated by tat...

plz chk followin links:: (IMPORTANT)

http://www.consumercomplaints.in/complaints/job-selection-order-c168762.html
http://www.consumercomplaints.in/complaints/no-1-fraud-company-c183366.html
http://www.consumercomplaints.in/complaints/about-recruitment-ieabout-job-selection-order-c180007.html

pLZ BE CAREFUL N CAUTIOUS BEFORE APPLYIN FOR NY JOBS......

WITH REGARDS,
rAm.

படித்ததில் பிடித்தது-II



” எங்கள்
வயிறு வெடித்தால் தான்
முதலாளியின் வயிறு நிறையும் “
கடற்கரையில்
துப்பாக்கிகளுக்கு எதிரே
அட்டையில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பலூன்கள் சொல்கின்றன !

விருந்து
=======

வீட்டுக்கு விருந்தினர் வருகை
எதிர் வீட்டுக் கோழி
உயிர் தப்பி ஓட்டம்

*******************************************************
ஓடி விளையாடு பாப்பா
எனஉரக்க பாடுகிறார்கள்
போலியோ குழந்தைகள் ….
*******************************************************
மகளுக்கு வரன் தேடி
நெடும் காலமாய் அலைகிறார்
திருமண தரகர்…..
*******************************************************
பேண்ட் சர்ட் போட்ட
சோள போம்மையின் நிழலில்
வெற்றுடம்புடன் தொழிலாளி!
*******************************************************
கனமான கருத்துகளைச் சுமந்தும்
காற்றில் பறக்கிறதே
காகிதம்
********************************************************
கைநாட்டு போடுபவன்
கையில் கணினி பற்றிய
விளக்க ஏடு ……
(பேருந்து சிறு புத்தக வியாபாரி ).
*********************************************************
தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு
*********************************************************
உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்
**********************************************************
எண்ணைக் குழாய்கள்
மண்ணைப் புணர்ந்ததில்
கிழிந்ததென்னவோ
ஓசோன் திரைதான்
***********************************************************
பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
‘மரங்களைக் கொல்லாதீர்‘
என்று துவங்கியது கவிதை
************************************************************
உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு
*************************************************************
செங்கல் சுமப்பவளுக்கு
இடுப்பு பாரம் குறைவுதான்
குறைந்த எடை குழந்தையால்.
*************************************************************
குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை
*************************************************************
சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
*************************************************************
வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்
*************************************************************
விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்
*************************************************************
கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்.
*************************************************************
தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்
*************************************************************
கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.
*************************************************************
உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.
*************************************************************
பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.
*************************************************************
ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்
*************************************************************
கிடைக்கும் வரை உழைப்பு
கிடைத்தபின் பிழைப்பு
பதவி
*************************************************************

படித்ததில் பிடித்தது

இந்நாள்
=======
எவ்வித பிரத்யேகமும் இன்றி
நாம் கடக்கிற
இந்த தினத்தில்
இந்த வினாடியில் ...
மழையின் தொடுதலால்
புதிய சித்திரமாகிறது வீதி!
எதிர்பாராத
கடிதத்தின் வரிகளில்
ஈரமாகிறது ஒரு கைக்குட்டை!
மறந்து விட்ட
நம் பழைய சொல் ஒன்று
யாரிடமோ இருக்கிறது... பத்திரமாக!
எவ்வித பிரத்யேகமும் இன்றி
நாம் கடக்கிற
இந்த தினத்தில்
எவரோ எழுதப்போகும்
நாட்குறிப்பில்
நம் பெயர் இருக்கலாம்
முதலாவதாய்...
கனவு
=====
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிற
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
ஆயுள் ரேகை
===============


ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோன ஆயுள்ரேகை


நிலா
====

ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலாவெளிச்சம்


காதல்
=====

உனக்கும் எனக்கும்
காதல் பிறந்தது
என்ன பெயர் வைக்கலாம்...?

நம்பிக்கை
==========

சகுனம் சரியில்லை
திரும்பி நடந்தது!
மனிதனை கண்ட பூனை!

இசை
=====

குழலினிது
யாழினிது
என்பர்
அவளது
கொலுசொலி
கேட்காதவர்

காத்திருப்பு
===========

நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்

பாசம்!
======

அன்னையர் தின
வாழ்த்து சொல்ல
கிளம்பினான்,
முதியோர் இல்லத்தில் இருந்த
அன்னையை தேடி

நீ
==

எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசு பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு...
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம் ..
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே...

கடைசி வரி
===========


பொருளற்று கழிந்து கொண்டிருக்கும்
பொழுதுகளின்
இறுதியில்
வந்து விடுகிறாய்
நீ
கவிதையின்
கடைசி வரி போல...

பரிசு
====

உன்
பிறந்த நாள்
எதை
பரிசளிப்பேன்
உன்னை விட
அழகாய்.
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location