Wednesday, December 23, 2009

உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!



உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!

"சாண்ட்டா கிளாஸ்" இப்பிடி ஒருத்தர் நிஜமாலுமே இருக்காரா?? சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து இந்த சந்தேகம் எனக்கு உண்டு...


எவ்ளோ அழகா பப்லியா அந்த கதாபாத்திரத்த உருவாக்கி இருக்காங்க... பாத்தவுடனே ப்ரேன்ட்லியா தோனுற மாதிரி ஒரு உருவம், அவருக்குன்னு ஒரு தனி விதமான வாகனம், செவப்பு டிரஸ் , செவப்பு குல்லா, வெள்ளந்தியான சிரிப்பு இப்பிடினுலாம்...
அப்பிடி யாரையும் இதுவரைக்கும் பாக்கலைனாலும் எனக்கு என்னவோ அந்த முகம் தெரியாத கதாபாத்திரம் மேல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது...



எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல நாங்க இருந்த காலனி முழுக்க சின்ன பசங்களா தான் இருந்தோம்.. அப்பலாம் கிறிஸ்துமஸ் அப்பிடினா ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்...
காலனில உள்ள யாராவது ஒரு அண்ணனோ அங்கில்லோ கிறிஸ்துமஸ் தாத்தா
( சாண்ட்டா கிளாஸ்ன்னு சொல்லறத விட தாத்தான்னு சொன்னாதான் ஒரு ஒட்டுதல் கிடைக்குது என்ன செய்ய ???!!!) வேஷம் போட்டுக்கிட்டு அங்க உள்ள எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாங்க...



சின்னதோ பெருசோ, மிட்டாயோ பொம்மையோ எது பரிசா கிடைச்சாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.. என்னதான் வீட்ல உள்ளவங்க பாத்து பாத்து நமக்கு எல்லாம் வாங்கிகொடுத்தாலும் நம்ம எதிர் பாக்காத ஒரு நேரத்துல யாரோ பரிசு கொடுக்கும்போது ஒரு தனி சந்தோசம் இருக்கத்தான் செஞ்சது!! நம்ம ப்ரெண்டுக்கு கொடுத்த பொம்ம நம்மழுத விட அழகா இருக்குன்னு நினைச்சப்போ லேசா பொறமை எட்டிபாக்கும் அப்புறம் வீட்டுல அழுது அடம்பிடிச்சு எனக்கும் அதே மாதிரி பொம்ம வாங்கினது தனிகதை....!!!

அதுக்கு அப்புறம் வேற ஊர் வேற ஸ்கூல்ன்னு என்னோட கிறிஸ்துமஸ் மாறிபோச்சு.. நான் படிச்ச கிறிஸ்டியன் ஸ்கூல்ல இயேசு பிறந்த அந்த மாட்டு தொழுவம் செட்ட போட்டு இயேசு எப்பிடி பொறந்தாரு, என்னலாம் சொன்னாரு எப்பிடி அவர சிலுவைல அரஞ்சாங்க அப்டினுலாம் ஒரே கதைய வருஷா வருஷம் வேற வேற பிள்ளைங்க நடிச்சு காமிப்பாங்க... அப்புறம் ஏதாவது ஒரு அக்கா கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு "ஜின்கிள் பெல்ஸ் ஜின்கிள் பெல்ஸ்" ன்னு பாடிகிட்டே மிட்டாய் கொடுப்பாங்க...



அப்புறம் காலேஜ்ல கிறிஸ்துமஸ்க்கு லீவ் கூட விட்டது கிடையாது.... எதோ போன போவட்டும்ன்னு கிறிஸ்டியன் பொண்ணுங்க பசங்களுக்கு மட்டும் "OD" கொடுப்பாங்க... கிறிஸ்துமஸ் கேக்ன்னு அவங்க கொடுக்குற தம்மாதுண்டு பீஸ்க்கு கிளாஸ் மொத்தமும் சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு வாய் கிடைச்சாலும் அந்த கேக்கோட டேஸ்ட் ச்ச சான்சே இல்ல போங்க!!!!


எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..
இந்த பதிவ போடுறதுக்கு ஒரு காரணம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!!

உண்மைலயே சாண்ட்டா கிளாஸ்ன்னு ஒருத்தர் இருகாப்புலய??!! அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு??... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா??? இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத்திரம் இருக்கா உலகத்துல???!!

மேல உள்ள எல்லா கேள்விக்கும் இல்லைங்கறது பதிலா இருந்தாலும் சாண்ட்டா கிளாஸ்ஸ எனக்கு ரொம்ப பிடிக்கத்தான் செய்யுது...



இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)

என்ன இந்த பொண்ணு கிறிஸ்துமஸ்ஸ பத்தி பேசாம சாண்ட்டா கிளாஸ்ஸ பத்தியே பேசிருக்கு அப்டின்னு லாம் யோசிக்காதிங்க.... எனக்கு எது பிடிக்குதோ அவங்கள பத்தி தான் பேசமுடியும்.....

எல்லாருக்கும் என்னோட கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் !!!!

Tuesday, December 22, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் விண்ணர்கள்!!

அவார்ட் கொடுக்குறதுன்னு முடிவாகிப்போச்சு... யாருக்குக் கொடுக்குறதுனு தான் ஒரே கொழப்பமா இருக்கு...
எதிர்பாத்த படியே நாலு பேருக்கு ஒருத்தர் வேட்டைக்காரண பத்தி எழுதிருக்காங்க...

எல்லா கம்மன்ட்டையும் படிச்சு பாத்ததுல இப்ப சொல்ர்ரவாங்களுக்குலாம் அவார்ட் கொடுக்குறத கமிட்டீல முடிவு பண்ணிருக்கோம்...

அவார்ட் கொடுக்குற என் வேலை முடிஞ்சுச்சு.... எல்லாரும் இந்த அவார்ட ஏத்துக்கோங்க பா....
அவார்ட் வின்னர்ஸ் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்... வழக்கம் போல இந்த அவார்டையும் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுங்க அப்பிடின்னு அன்போட கேட்டுக்குறேன்....

ஸ்ரீராம். கம்மென்ட்டினது

"நான் அழுதா தாங்க மாட்டே...இவன் அழுதா தூங்க மாட்டே..."

உங்களில் ஒருவன்... கம்மென்ட்டினது

"வேட்டைக்காரன் பார்க்க போக வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்...கேட்டியா பாவி பயலே....இப்போ இப்படி திடீர் திடீருன்னு அழுது என்னயுமில்ல பயமுறுத்தி அழ வைக்கிற...."

உருப்புடாதது_அணிமா கம்மென்ட்டினது

"எவ்ளோ சொல்லியும் எதுக்கு எங்களை வேட்டைக்காரன் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க???"

ஜீவன் கம்மென்ட்டினது

"எனக்கு நச் கமண்டர் அவார்ட் கொடுக்காட்டி நானும் இப்படித்தான் அழுவேன்...!"

க‌ரிச‌ல்கார‌ன் கம்மென்ட்டினது

"அவ்ளோ தாண்டா ம்பி டாக்டர் ஊசி போட்டு முடிச்சுட்டாரு
அழுகாதே நீ அழுகபாத்து அண்னணுக்கும் அழுகையா ருது"

Romeoboy கம்மென்ட்டினது

"இந்த மொக்கை பதிவுக்கு எங்கள போஸ் குடுக்க சொல்லுறிங்களே .."

கிருபாநந்தினி கம்மென்ட்டினது

“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”



அவங்க எல்லாரும் கம்மென்ட்டினது இந்த படத்த பாத்துதான்.....



அவார்ட் வாங்காதா எல்லாரும் பீல் பண்ணாதிங்க... அடுத்த அவார்ட் உங்களுக்கு கிடைக்கலாம்!!!

அன்புடன்,
ரசிக்கும் சீமாட்டி :)

Monday, December 21, 2009

ஜஸ்ட் லைக் ஹெவன் - ரொமாண்டிக் படம்



ரீஸ் விதேர்ஸ்பூன் தான் இந்த படத்தோட கதாநாயகி. என்னமோ தெரியல இவங்கள எனக்கு பாத்த உடனே பிடிச்சுபோச்சு. இவங்க நடிச்ச படங்களா தேடி பிடிச்சு பாத்தகாலம் உண்டு.



அப்படி நான் பாத்ததுல முதல் படம் தான் "ஜஸ்ட் லைக் ஹெவென்".



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோயின் ஒரு டாக்டர். சதா சர்வ காலமும் கடமையே கண்ணா இருக்குறவங்க. வேலை முடிஞ்சு ஒரு நாள் அவங்க ப்ளைண்ட் டேட்ட பாக்க போற சமயத்துல எதிர்பாராத விதமா ஒரு விபத்துல மாட்டிக்கிறாங்க.


அப்டியே கட் பண்ணி அடுத்த சீன். மூணு மாசம் கழிச்சுன்னு போடுறாங்க. ஒருத்தர் வீடு தேடி அலைஞ்சுட்டு இருக்காரு. இவரு தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுவா??!! மார்க் ருபல்லோ அப்டின்னு ஒருத்தர். பாத்தவுடனே பிடிக்குற டைப் இல்ல. பட் இந்த படத்துல அந்த கதாபாத்திரத்த நல்லா செஞ்சுருக்காரு.

சரி கதைக்கு வருவோம். அப்படி வீடு தேடி வரவரு நம்ம ஹீரோயின் இருந்த வீட்டுல குடியிருக்க நேரிடுது. அங்க திடீர்னு ஹீரோயின் இவரு முன்னாடி வந்து நின்னு கண்டபடி திட்டுறாங்க. இது என் வீடு யார கேட்டு நீ வந்த?? ஏன் பொருள எல்லாம் எடம் மாத்தி மாத்தி வச்சுருக்க அப்பிடினுலாம். கொஞ்ச நேரம் ஹீரோவுக்கு ஒன்னுமே புரியாம குழம்பிபோய் நிக்கிறாரு.

அந்த பொண்ணு சாதாரண பொண்ணா தெரியல. திடீர் திடீர் ன்னு வருது போவுது. செவத்துலலாம் நடக்குது.பாத்து பயங்கரமா டெரர் ஆவுற நம்ம ஹீரோ அவரு நண்பர் ஒருத்தர் கிட்ட போய் கேக்குறாரு ஏன் இப்பிடிலாம் நடக்குதுன்னு. அது பேய் இல்ல ஒரு பொண்ணோட ஆன்மா அப்பிடின்னு சொல்ற நண்பர் அவ உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறா அதுனால அவளுக்கு என்ன வேணும்ன்னு நீ தான் கேக்கணும் லாம் சொல்றாரு.



கொஞ்ச கொஞ்சமா அந்த பொண்ணுகிட்ட பேசி அவ யாரு என்னன்னுலாம் தெரிஞ்சுக்க முயற்சி பண்றாரு. பழசு எதுவும் ஞாபகம் வராத அந்த பொண்ணு கொஞ்சம் லேட்டா தான் தெரியுது இது வெறும் ஆன்மா மட்டும் தான் அப்பிடின்னு.

உயிரை கைல பிடிச்சுகிட்டு அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அடி பட்டு எப்பிடியும் பொழச்சுடனும் ன்னு ஒரு நம்பிக்கைல ஹீரோயினோட உடம்பு ஹாஸ்பிட்டல்ல இருக்கும். இந்த ஹீரோ என்ன பண்ணாரு அந்த பொண்ண பொழைக்க வச்சாரா அப்பிடிலாம் யோசிக்கறவங்களுக்கு அவரு அந்த பொண்ண ரிஸ்க் எடுத்து பொழைக்க வச்சுடுவாறு. ஆனா பொழைக்குற அந்த பொண்ணுக்கு தான் இவரு மறந்து போயிரும் நம்ம மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு டிவிடியோ டோற்றேன்ட்டோ கெடச்சா பாருங்க.

அந்த பொண்ணு அவருக்கு மட்டும் தெரியுரதுக்கு காரணம் அவரு தான் அந்த பொண்ணு சந்திக்க போறதா இருந்த ப்ளைண்ட் டேட்.!!!!


அப்பறம் படத்தோட டெக்னிகல் ஆஸ்பெக்ட்லாம் பேசுறா அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸோ விட்டுடேன்.இந்த படம் முழுக்க அவங்க ஒரே காஸ்ட்யும்ல தான் வருவாங்க ஆனா அது போர் அடிக்கல. சில இடங்கள்ல வசனம் நல்லா இருந்துச்சு உதாரணத்துக்கு ஹீரோவும் ஹீரோயினும் படுக்கைல கைகோர்த்துபேசுற காட்சி அப்புறம் கடைசி சீன் இப்படி சில.


மொத்ததுல இது ஒரு ரொமாண்டிக்கான படம். அந்த வகை படங்கள் பிடிக்கும்னா தாராளமா பாருங்க. அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே!!!

Saturday, December 19, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் காத்திருக்கு...

என்னையும் மதிச்சு ஒரு பதிவர் அவார்ட்லாம் கொடுத்துருக்காங்க...

அவங்க கொடுத்த அவார்டுகள பகிர்ந்துக்கணும்ன்னு பிரியப்படுறேன்..!!

பட்டாம்பூச்சி அவார்டும் பிளாக்கர் எக்ஸ்செல்லன்ஸ் அவார்டும் யாரு யாருக்குன்னு அடுத்த பதிவுகள்ல சொல்றேன்...

இப்பதைக்கு கமெண்ட் கிங்/க்வீன் அவார்ட் யாருக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ண தான் இந்த பதிவு...

இந்த அவார்ட் உங்களுக்கும் கிடைக்கணும்னா பெருசா லாம் ஒன்னும் பண்ண வேணாம்... கீழ உள்ள படத்த பாத்துத்துட்டு உங்க மனசுல என்ன தோணுதோ அத பட்டுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...


எந்த கமெண்ட் நச்சுன்னு இருக்குன்னு "அவார்ட் கமிட்டி பீல் பண்ணுதோ (நானும் நண்பர்களும்) அவங்களுக்கு ஒரு சுபயோகா சுபதினத்தில் விருது அறிவிக்கப்படும் என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
ரசிக்கும் சீமாட்டி. :)


ரெடி ஸ்டெடி கோ........

Thursday, December 17, 2009

பின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்

ஒரு மனிதனுக்கு ரொம்ப ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவனுக்கு பிரைன் ட்யுமார் ன்னு சொல்லி மருத்துவமனைல சேர்க்குறாங்க. அவன குணப் படுத்த எவ்ளவோ முயற்சி பண்ற மருத்துவர்கள் நம்ம தமிழ் சினிமால வராப்புல அவர இனிமே காப்பாத்த mudiyathu ன்னு கண்ணாடிய கலட்டி தொடச்சுகிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கூட இல்லாம அந்த மனுஷன் செத்துபோய்டுவான். அவன் செத்து போனத நினச்சு நினச்சு அவனோட மனைவி ரொம்ப அழுவாங்க. அதுக்கு அப்புறம் எல்லா காரியங்களும் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போவாங்க.

வீட்டுல புருஷனோட பீரோவ எதோ எடுக்குறதுக்காக திறக்கும்போது அதுக்குள்ளார ஒரு கவர் இருக்கும். சென்ட் அட்ரெஸ்ல மனைவி பெயர போட்டு. நமக்கு என்னத்துக்கு இவரு லெட்டர் எழுதி இருக்காரு அப்டின்னு அந்த பெண் அத திறந்து பாத்த அதுக்குள்ளே சிலபல மாத்திரைகளும் ஒரு கடிதமும் இருக்கும்.

"இந்த மாத்திரிகளை சாப்பிடும்மா. ரொம்ப நேரம் அழுதா உனக்கு ஜலோதோஷம் பிடிச்சுக்கும்"
ன்னு அந்த கடிதத்துல இருக்கிற வரிகள பாத்ததும் அந்த மனைவி அப்டியே ஒடஞ்சு அழுதுருவாங்க.


இதுல இருந்து என்ன தெரியுது???!!!!


மேல சொன்ன நாலு பத்தி கதைய மையமா வச்சு வந்த படம் தான் "P.S. I love You".


கணவன் மனைவியா இருக்கிற ஒவ்வொரு நாளும் சண்ட போட்டுகிட்டே இருக்காங்க ஹீரோவும் ஹீரோயினும். பிரிவு அவங்கள எப்பிடி பொரட்டி போடுது அப்டின்றது தான் கதை.

தான் இறந்து போனாலும் தன்னோட பிரிவு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்குற ஹீரோ கடிதங்கள் மூலமா அவங்களோடவே இருக்கிற மாதிரி காமிச்சுருப்பாங்க.
இந்த கடிதத்துக்கு அப்புறம் இந்த கடிதம்ன்னு ஹீரோ ஆர்டர் பண்ணி வச்சுருக்கதுலயே தான் மனைவி ஒவ்வொரு செயலையும் எப்பிடி செய்வா,இதுக்கு அவளோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்ன்னு ஹீரோ மனைவிய அவ்ளோ புரிஞ்சுவச்சுருப்பாறு.


தன்னோட மனைவிய தனிமைல விட்டுற கூடாது அப்பிடிங்கற எண்ணம் அவரோட ஒவ்வொரு கடிதத்துளையும் தெரியும். P.S. I love You ன்னு எல்லா கடிதத்துளையும் அவரு எழுதிருக்குறது அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆறுதலா அதேசமயம் இப்பிடி நம்மள நேசிச்சவன் விட்டுட்டு போயிட்டானேன்னு பீல் பண்ண வைக்கும்.


படம் பாக்க ஆரம்பிக்கும்போது ஒருவித சுவாரசியம் இல்லாம தான் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இந்த படம் எனக்கு பிடிச்சுச்சு.

பொழுதுபோக்குக்காக படம் பாக்குறவங்களுக்கு இது போர் சினிமாவ இருக்கும். கதைல ஒன்றி படம் பாக்குற டைப் னா மே பி உங்களுக்கும் பிடிக்கலாம். :)


ஓட்டு போடுங்க மக்களே!!

Monday, December 14, 2009

இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்

நெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..
எனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல்லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...

ஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு... அதுனால எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...

அதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்!!!

சரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது "இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் " அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...
அவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா!! (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...!!)

எதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..

வீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...


"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...

அவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....!!


இங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...

அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....

இந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...


அப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......




உங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....!!!
கண்டிப்பா பாருங்க....


ஓட்டு போடுங்க மக்களே!!!

Sunday, December 13, 2009

நிலா - குட்டி கவிதை

கவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
இப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...
எனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...
நான் ஏற்கனவே எழுதுன

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

அப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (!!!) தெரிஞ்சுகோங்க....

என்ன தெரிஞ்சுகிட்டீங்களா.... ??!! அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...

என்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

அப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க (!!!) ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன்னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...

நான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...



நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

கொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...!!!

எதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....!!!




Friday, December 11, 2009

தலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்!!

இன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் "

ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...

சரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...
டவுன்லோட் பண்ணி பாத்த படம் "லவ் ஹாபென்ஸ் " இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....!!!

படத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....


இந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா...??!! சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......

இனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்!!!

எதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு நடிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...

அது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...


அவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட (!!!!) பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...


அவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...

"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....

படத்தோட பெயர் "BIG FAT LIAR".....

இந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்


"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் "
அம்புட்டு தான்....
நான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு!!!




பி.கு:
டிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் !!!

Monday, December 7, 2009

குழந்தை <> பெரியவங்க (not equal to)

கலக்க போவது யாரு ஜூனியர்ஸ் இந்த நிகழ்ச்சி ரொம்ப காலமா வருது.. எத்தன மணிக்கு போடுறான் னு தெரியாத காரணத்தினால இவ்ளோ நாளா பார்க்கல... நேத்து என்னமோ எதிர்ச்சியா பார்க்க நேர்ந்துச்சு.....

நான் பார்க்கும் போது ஒரு சிறுமி நர்ஸ் வேஷம் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல நடக்கிற நகைச்சுவைகளை சொல்லிக்கிட்டு இருந்துச்சு...

அதுல ஒரு பிட்

"எங்க டாக்டர் எவனையோ வளச்சுப்போட்டு இந்த இடத்தை வாங்கினாரு... நான் அந்த டாக்டரையே வளச்சுப்போட்டுட்டேன்" னு அப்படி னு சொல்லுது...

எல்லாரும் கைதட்டி சிரிக்கிறாங்க.... இது மட்டும் இல்ல அந்த பொண்ணு சொன்னதுல பல விஷயம் இப்படி தான் இருக்கு... அப்பப்ப அவங்க பெற்றோர்கள வேற காமிக்கிறாங்க... பொண்ணு பாத்து ரொம்ப பூரிச்சு பொய் இருக்காங்க..

சத்தியமா அந்த பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது.... யாராவது பெரியவங்க தான் அந்த ஜோக்கெல்லாம் சொல்லுமா னு சொல்லிகொடுதுருக்கணும்... இந்த வயசுக்கு என்ன சொல்லமுடியுமோ அத சொல்லிகொடுக்கலாம் ல...

இந்த பொண்ணையோ, அவ பெற்றோர்களையோ குறிப்பிட்டு சொல்ல வரல பொதுவா வே எல்லாருக்கும் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நடந்துக்கணும் அப்டின்ற எண்ணம் இருக்க தான் செய்யுது....


இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! னு வெளங்கல...

ஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா "இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது" னு சொல்ற பெற்றோர்கள விட " என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா " னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்...

ஏன் இப்படின்னு எனக்கு புரியவே இல்ல.... சமர்த்தா சுட்டித்தனமா பேசுறது வேற அதிக பிரசங்கி தனமா பேசுறது வேற... பொதுவா நம்ம அதிகப்ரசங்கி தனமா பேசினா ரசிக்கிறோமே ஒழிய அது தப்பு னு எடுத்து சொல்றது இல்ல...

நாம எப்டியோ அப்படி தான் நம்ம பிள்ளையும்... நம்ம யாருக்கு/எதுக்கு மரியாதையை கொடுக்கிறோமோ அதுக்கு கண்டிப்பா அவங்களும் மரியாத கொடுப்பாங்க...


எங்கயோ ஆரம்பிச்சு எங்க எங்கயோ போறேனோ... கோர்வையா என் மூளை யோசிக்க மாட்டேங்குது என்ன செய்ய ??!!!

சரி மீண்டும் நிகழ்ச்சிக்கே வரேன்... அந்தா பொண்ணு சொன்னதுக்குலம் கைதட்டி சிரிச்ச நடுவர்கள் என்ன சொல்லுவங்களோ னு பாத்தேன்

"வயசுக்கு மீறின வார்த்தைகளா இருந்தாலும் உங்க expressions மற்றும் body language உங்க பெர்போர்மன்சே அழகாக்கிருச்சு " னு பாண்டிய ராஜ் சொன்னாரு... அதுவரைக்கும் சந்தோசம்...

அந்த நிகழ்ச்சிலயே இன்னொரு போட்டியாளரா இரட்டையர்கள் வந்தாங்க.. அவங்க நகைச்சுவை கொஞ்சம் டீசென்டாவே... அவங்க வயசுக்கு சொல்றப்புலயே இருந்துச்சு...


பான்சி டிரஸ் காம்படிஷன் மாதிரி எல்லாரும் வேஷம் போட்டு வந்து காமெடி பண்ணாலும் இந்த பிள்ளைங்கள இப்பிடிலாம் ஜோக் னு சொல்லி பேச வைக்கற பெரியவங்கள பாத்த மனசுக்குள்ள வருத்தமா தாங்க இருக்கு !!!!


:(:(
வருத்ததுடன்,
ரசிக்கும் சீமாட்டி

Friday, December 4, 2009

"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


அந்தா இந்தா னு இழுத்துகிட்டு இருந்த திருச்செல்வம் ஒரு வழியா கோலங்கள் தொடரை இன்னையோட முடிக்கிறாரு...
இதுனால யாருக்கு என்ன சந்தோசம் துக்கமோ தெரியல.....

"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "

போட்டாலும் போட்டான் கோலங்கள் னு... நான் பணிரண்டாவது படிச்ச காலத்துல இருந்து நிக்காம ஓடுது... நல்லவேல நாலு வருஷம் ஹாஸ்டல்ல இருந்ததுனால தினமும் இத நான் பாக்க வேண்டிய கொடுமை நேரல...

திருசெல்வத்த ஒரு காரணத்துக்காக பாராட்டியே ஆகணும் பா... என்னைக்கு கதை பாத்தாலும் நமக்கு விளங்கும்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தரவ வீட்டுக்கு வரும்போது மட்டும் சீரியல் பாத்ததுலயே எனக்கு கதை புரியுது அப்படின்னா பாத்துகோங்களேன்.. என்ன அந்த கதாபாத்திரத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் வேணும்னா கொஞ்சம் மாறி இருப்பாங்க அம்புட்டு தான்.......

இவ்ளோ நாளா மொள்ளமா நகர்த்தின கதைய ஒரே வாரத்துல ட்விஸ்ட் அண்ட் டர்ன் வச்சு முடிக்கிறாங்க... என்ன கடைசில சம்சாரம் அது மின்சாரம் படத்துல வராப்புல " நான் இங்க இருந்து போறேன்.. அப்பப்ப உங்கள வந்து சந்திக்கிறேன்... சந்தோசங்கள பகிர்ந்துபோம்" னு அபி கதாபாத்திரம் சொல்லுறது ரொம்பவே பழைய பிட்டா இருக்கு னு பீல் பண்றேன்.....

இப்படி கதைய முடிக்கறதுக்கு ஆதி ஏன்தான் இம்புட்டு நாள் ஹி டெசிபெல்ல கத்தினாரோ... இன்னும் சுவாரசியமா முடிசுருக்கலாம்....

எது நடந்தா என்ன... முடிக்கிறாங்கலே அதுவே பெரிய சந்தோசம்... இனிமேல்ட்டு நிம்மதியா சேனல் மாத்துங்க அப்டின்னு அப்பா கூட சண்ட போடாம சூப்பர் சிங்கர் பாக்கலாம்....



"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


பதிவ படிச்சு மொக்கயானவங்களுக்கு ஒரு சின்ன குறுஞ்செய்தி

ஒரு சமயம் நியூட்டன் கிளாஸ் படிச்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவருக்கு வயசு 17 .



படிச்சுகிட்டு இருக்கும்போது அவரு கால்ல ஒரு பாம்பு கொத்திருச்சு. அப்பவும் அவரு படிக்கிறத நிறுத்தாம தொடர்ந்து படிச்சுகிட்டே இருந்தாரு.



இத பார்த்து ஆச்சிரிய பட்டுப்போன அவரோட டீச்சர் அவருகிட்டக கேக்குறாரு , அதுக்கு நியூட்டன் சொன்னாராம் " பாம்பு என் காலை தான் கொத்துச்சு மூளைய இல்லை. அதுனால எனக்கு கவனம் சிதறலைன்னு"




இதுக்கு நாம சொல்ற பேர் தான்



"வெட்டி சீன் "


பி.கு: டிஸ்கி அப்டினா என்னனு யாராவது விலக்கி சொல்லவும்.

Wednesday, December 2, 2009

சார்மிங்க்கா இருக்கிறது எப்படி??!!!!




ஒரு சிலர எல்லாருக்கும் பிடிக்கும்... அவங்க எப்படி இருந்தாலும் ஏழையா,பணக்காரனா,அழகானவனா, சுமரானவனா இப்படி எப்படி இருந்தாலும் அவங்கள எல்லாருக்கும் பிடிக்கறதுக்கு காரணம் அவங்க கிட்ட உள்ள ஒரு விதமான காந்த சக்தி... சிலருக்கு இயற்கையாவே அது உண்டு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி... இன்னும் சிலர் தன்னோட செயல்களால அத கொண்டுவந்துருவாங்க...


அப்பிடி "Center Of Attraction" ஆகுறதுக்கு சில சாம்பிள் டிப்ஸ் இங்க

1. "நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் " னு பாரதியார் சொல்லிருக்குறது போல நடக்க ஆரம்பிங்க. அதுக்குன்னு வடிவேலு கணக்கா விரச்சுகிட்டு நடக்ககூடாது.

2 . முடிஞ்ச அளவுக்கு சிரிச்ச முகத்தோடவே இருக்க முயற்சி பண்ணுங்க. உம்முன்னு வச்சுக்க கூடாது. எதுவந்தாலும் சமாளிப்போம் னு முகத்துலயே தெரியனும் .

3 . ஒருத்தர சந்திக்கும்போது சின்ன தலை அசைப்போட சிரிங்க. கண்களை பார்த்து பேசனும். அதே சமயம் ஓவரா சிரிச்சு வச்சுடாதிங்க . அவரும் இதயே திருப்பி பண்ணனும் னு எதிர்பார்க்காதிங்க .

4 . நீங்க சந்திக்கிற எல்லா மனிதர்களையும் பெயரோட நினைவுல வச்சுகோங்க. பேச்ச தொடங்கும்போதும் முடிக்கும்போதும் பேர சொல்லுங்க. இப்படி சொல்றது மூலமா உங்களுக்கு பெயர் நினைவுல இருக்கதோட நீங்க பேசிகிட்டு இருக்குறவருக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் அதாவது உங்களுக்கு அவர பிடிச்சுருக்குதுன்னு .

5 . மனிதர்கள சந்திக்கிறதுல ஆர்வம் காட்டுங்க. நீங்க சந்திக்கிற எல்லாருகிட்டயும் பேச்சு கொடுங்க. பல சமயங்களுல அது உங்களுக்கு உதவி பண்ணும். அதுக்குன்னு தொன தொன பேசிகிட்டே இருக்கபடாது.

6 . இப்ப நீங்க ஒரு நண்பர்கள் கூட்டத்துல இருக்கீங்க அப்டினா அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அத பத்தி பேசனும். சும்மா உங்களுக்கு தெரியும் அப்டிங்கரதுகாக எதையாவது பேசக்கூடாது.

7 . யாரவது உங்ககிட்டக யாரைப்பதியாவது எதுனா பேசினா நீங்களும் நாலு பிட்ட சேத்து போடக்கூடாது. அவங்கள பத்தின நல்லா விசயங்கள மட்டும் தான் நாலு பேர்கிட்ட சொல்லணும். இப்படி நீங்க சொல்றது மூலமா எல்லாருகிட்டயும் நீங்க ரொம்ப நல்லவரு அப்டின்னு பெயர் வாங்கிடலாம் :)

8 . பொய் சொல்லாம இருக்கனும் . அப்டியே சொன்னாலும் அத எல்லாருகிட்டயும் மெயின்டைன் பண்ணனும். உதரணத்துக்கு ராணி கிட்ட எனக்கு கமலை பிடிக்கும் னு சொல்லிட்டு ராஜி கிட்ட எனக்கு கமலை பிடிக்காது னு சொன்னா ராணியும் ராஜியும் பேசிக்கும்போதும் உங்க குட்டு வெளிபடுரதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எதுக்கு இந்த ரிஸ்க் னு பொய் சொல்லாம இருக்க பழகிக்கோங்க.

9 . மனசார பாராட்டுங்க. ஒருத்தர் எதையாவது சிறப்பா செய்யும்போது உடனே வாய்விட்டு பாரட்டிடனும். கொஞ்சம் லேட் ஆனாலும் அது சின்ன பொறாமைய கிளப்பிவிட்டுரும்.

10 . அதே மாதிரி அடுத்தவங்க உங்கள பாராட்டினா வெறுமன நன்றியோட நிப்பாட்டிக்காம நீங்க இத கவனிச்சு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படி இப்படி னு ரெண்டு வரி சேத்து சொல்லுங்க.

11 .உங்க குரல்ல உங்க சந்தோசம் தெரியனும். ஒருத்தர பாராட்டும்போது கத்தி பேசக்கூடாது. எதுலயும் ஒரு நிதானம் ஜென்டில்னஸ் இருக்கமாதிரி பாத்துக்கோங்க.

பி.கு: charishma அப்டிங்கறது உள்ள இருந்து வரணும். மேல சொல்லிருகறது எல்லாம் அத கொஞ்சம் பாலிஷ் பண்ற சமாச்சாரங்கள் தான்.

தயவு செஞ்சு அடுத்தவங்கள இமிடேட் பண்ணாதிங்க. உங்களுக்கு னு ஒரிஜினாலிட்டி இருக்கனும்.



இதெல்லாம் என்னங்க பெரிய விஷயம் நடுவுல நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா "Center of Attraction" ஆகிடலாம் னு மொக்க போடுறவங்க உங்க காமேன்ட்டுகள பின்னூடத்துல சொல்லிட்டு போங்க...

அப்டியே போற போக்குல ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க மகராசனுங்கலே!!!!

Friday, November 13, 2009

கார்ட்டூன் ரசிகர்கள் ஸ்பெஷல்


நீங்க கார்ட்டூன் பார்த்து இருக்கீங்களா... ???!!
அப்பிடினா இந்த பதிவ படிங்க... இல்லைனாலும் பரவால படிங்க ஏன்னாக்க நான் கார்ட்டூன் கதைய பத்தி எழுதபோறது இல்ல... ஏதோ நான் பார்த்து ரசிச்ச சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பத்தி தான் சொல்லபோறேன்...

நான் ஸ்கூல் படிக்கும்போது ( ஹலோ ரொம்ப லாங்க ல திங்க் பண்ணாதிங்க ஒரு நாலு வருஷம் முன்னாடி ) சாயந்தரம் ஆனாக்க கார்ட்டூன் நெட்வொர்க் பாக்குறது என் வழக்கம்... (எங்க வீட்டுல யாருக்கும் சீரியல் பார்கற வழக்கம் இல்லாம இருந்தது நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ!!!)

ஆறு மணிக்கு டாம் அண்ட் ஜெர்ரி ல ஆரம்பிச்சு வரிசையா பாபாய் , ஸ்கூபி டூ , டெக்ஸ்டர்ஸ் லபோரட்டோரி , பிளின்ஸ்டோன்ஸ் , ட்வீட்டி னு வர கார்ட்டூன் அம்புட்டையும் பாப்பேன்.. இன்னும் சிலதுக்கெல்லாம் பேர் மறந்து போச்சு...

அப்பலாம் கார்ட்டூன் பாக்குறதே கொண்டாட்டமா இருக்கும்... அப்புறம் காலேஜ் போயிட்டு இந்த கார்டூனலாம் கொஞ்சம் நாள் பார்கவே இல்ல... அப்பிடி பார்க்காததுக்கு ரெண்டு முக்கிய காரணம் இருக்கு... ஒண்ணு இந்த பொண்ணு இன்னும் வளரவே இல்லைன்னு பாதி விசயத்துக்கு வெட்டி விட்டுருவாளுக.. ரெண்டாவது காலேஜ் ஹாஸ்டல்ல டிவி கிடையாது அப்டியே இருந்தாலும் நம்ம ஒருத்தி கார்ட்டூன் நெட்வொர்க் வை னு சொன்னா அங்க உள்ள அத்தன பேரும் நம்மள ஏலியன் ரேஞ்க்கு லுக்கு விடுவாளுக... அதுனால என்னத்துக்கு இந்த ப்ரெச்சனை னு விட்டாச்சு...

இப்ப காலேஜ் முடிஞ்சு வெட்டியா தானே வீட்டுல இருக்கேன் ( கம்பெனி இன்னும் கூப்பிடல பா ;( ) அதுனால பழைய படி கார்ட்டூன் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்!!! ( வெட்டியா இருக்கதுக்கு இதையாச்சும் பண்ணலாம்னு தான்..) அப்பலாம் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும்.. இப்ப எத்தன சேனல் வந்துருச்சு... தமிழ் ல வேற பேசுதுங்க எல்லா கதாபாத்திரமும்.. ஒரு பக்கம் டோரா புஜ்ஜி னு குழந்தைங்களுக்கு கதை சொல்லி வருது... இன்னொரு பக்கம் ஜெடிக்ஸ் னு அடிக்கவும் சொல்லிதருது!! ( என் கஸின் கிட்ட ரொம்ப அடி வாங்கிட்டேங்க!!!)


டாம் அண்ட் ஜெர்ரி யும் பாபாய்யும் இன்னும் வந்துகிட்டு தான் இருக்கு ஆனா அதே பழைய எபிசொட்ஸ்... ஆனாலும் எனகென்னமோ சலிக்கல இன்னும் எத்தனை முறை போட்டாலும் பாப்பேன் நானு...

புதுசா நெறையா கார்டூன்ஸ் வந்துருக்கு பென் 10, ஸ்டார் வார்ஸ், சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா , ஜாக்கி சாண், ஸ்டுஅர்ட் லிட்டில், செட்ரிக் , காட்ஜிள்ள , அண்ணா'ஸ் ஸ்டோரிஎஸ் னு நெறைய வந்துருச்சு...


சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா நல்லா இருக்கு.. மத்ததுல லாம் பாண்டஸி , ஏலியன்ஸ் அப்டினே இருக்கு... ஜாக்கி சாண் கார்ட்டூன் நல்லா இருக்கு.. படம் பார்குறாப்புலையே இருக்கு... ஜாக்கி கு குரல் கொடுக்குரவரு பேர் தெரியல ஆனா அந்த குரல் ரொம்ப பொருத்தமா இருக்கு...!!


அப்புறம் இந்த போகோ சேனல் ல MAD ( Music Art Dance ) அதுல பண்ணிகாமிக்கறதும் இன்டரஸ்டிங்கா இருக்கு...

இந்த மாதிரியே கார்டூனா கலர் கலரா வரதுனாலயே ஃபேஸ் புக் ல ஃபார்ம்வில்லி,கஃபே வொர்ல்ட்,ஃபிஷ் வில்லி, யோ வில்லி னு எல்லா விளையாட்டும் பிடிச்சு போச்சு.. வேலை வெட்டிக்கு கூப்பிடுற வரைக்கும் இப்பிடி விளையாண்டே என் காலம் போயிரும் போல...


என்னடா இந்த புள்ள இன்னும் வளரவே இல்லைன்னு நீங்களும் நினைக்குறீங்களா....??!! நினைச்சுட்டு போங்க பாஸு...


ஒண்ணு கவனிச்சு பாத்தீங்களா..??!! டாம் அண்ட் ஜெர்ரி , பாபாய் , ட்வீட்டி னு நான் சொன்ன அத்தன கார்ட்டூன் லையும் தனிமனித வன்முறை தான்...ஒருத்தர மாத்தி ஒருத்தர் அடிச்சுகிட்டே தான் இருக்காங்க பல வருஷமா!!( டாம்,ஜெர்ரி , ட்வீட்டி லாம் எப்பிடி மனிதனாகும் னு கேக்க கூடாது )


கார்டூன கார்டூனா மட்டும் பாக்குறவங்க ஜாஸ்தி தான்.... இருந்தாலும் நான் என்ன சொல்ல வரேன்னா கார்டூன ஸ்ட்ரெஸ் ரிலீசா மட்டும் பாத்த நல்லது

( ஸப்ப்ப்ப்பா கடைசி வரில ஒரு கருத்து சொல்லியாச்சு !!!!)

Saturday, October 31, 2009

ஜப் வி மெட் Vs கண்டேன் காதலை



பொதுவா தமிழ் படத்த பத்தி எழுதி ரிஸ்க் எடுக்க நான் விரும்புறது இல்ல... ஏன்னாக்க எப்டியும் நீங்க எல்லாரும் படம் பார்த்துருப்பீங்க இல்லனா ஏற்கனவே யாருனாச்சும் எழுதுன விமர்சனங்கள படிச்சி அந்த படம் எப்படி என்ன ஏது னு தெருஞ்சுருப்பீங்க... என்ன நான் சொல்றது?!! ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள!!)

அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை னு கேட்க்குறீங்களா..??!! சும்மா ஒரு ரிஸ்க்க ரஸ்க்கு மாதிரி சாப்பிடலாம்ன்னு தான்...

ஜப் வி மெட் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... ஹிந்தி தெரியலனாலும் நாலு பேர மொழிபெயர்ப்பு பண்ண சொல்லி ஒவ்வொரு சீனையும் நாப்பது தடவைக்கு மேல பாத்து ( ரொம்ப அதிகமா இருக்கோ ??!!) சரி சரி நாலு தடவைக்கு மேல பாத்து ஒரு வழியா படத்த புரிஞ்சுகிட்டேன்....!!

ஷாகித் கபூருக்கும் கரீனாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி என்னமோ சூப்பரா இருந்துச்சு... பரத்துக்கும் தம்மனாவுக்கும் அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சுன்னு எனக்கு பட்டுச்சு...
ஹிந்தி படத்துல அவங்களுக்கு உள்ள சில சீனஎல்லாம் தமிழ்ல தேவைல்லை ன்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல....

அப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வளம் வருவாங்க அதையே நம்ம தம்மன்னா தங்கச்சி ஓவர் அக்டிங் பண்ணி கொஞ்சம் லூசு மாதிரி சில சீன் ல பண்ணிருச்சு...

பரத் பத்தி என்ன சொல்றது.... அவரு பங்குக்கு ஷாகித்த கொஞ்சம் சீன்ஸ்ல காப்பி பண்ணிருக்காரு...அவரு திரும்பி வந்து கம்பெனி மீட்டிங்க்ல பேசுற சீன்ல ரொம்ப சாதரணமா பேசிட்டாரு... (கஜினி ல சூர்யா என்ன அழகா பேசுவாரு.... ச்சாச்சா சான்சே இல்ல..... சூர்யாவா பத்தி நினச்சது போதும்ங்கறீங்களா ... ரைட்டு விடுங்க ....)

ஹிந்தி படத்துல இல்லாம தமிழ்ல டைரக்டர் சேர்த்துருக்கது நம்ம சந்தானம் கதாபாத்திரம் தான்... படம் முழுக்க வராரு... வழக்கத்த விட கம்மியாவே ரெட்டை அர்த்த வசனங்கள்லாம் பேசாம வரது நல்ல இருக்கு... அவரு டயலாக்ஸ் ரெண்டு மூணு எடத்துல சென்சார் பண்ணிடாங்க.... அப்புறம் அந்த தியேட்டர் சீன் என்னத்துக்குன்னு தான் தெரியல!!!

தம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க...??!! எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....

அப்புறம் நம்ம கேபிள் அண்ணன் சொன்ன மாதிரி ஹிந்தி படத்துல ஷாகித் கரீனா வீட்டுக்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றமே இருக்கும்... இங்கன அப்டிலாம் ஒன்னும் இல்லாதது பெரிய குறை தான்....

ஜப் வி மெட் ங்கற படத்த தான் ரீமேக் பண்ணிருக்காங்க னு நினச்சேன்... நடுவுல ஒரு பாட்டுக்கு நம்ம பரத் கஜினி ல ஆமீர் கான் ஆடுனாப்ல ஒரு பாட்டுக்கு வேற ஆடுறாரு....!!!

பாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு????!!!

சந்தானத்தோட காமெடி நல்லா இருந்துச்சு... "மூணு மில்லு முப்பதிரெண்டு பல்லு" ன்னு ரய்மிங்ங்கா பின்றாப்ள..... வடிவேலு கணக்கா இவரும் இந்த படத்துல சிங்கமுத்து கூட சேர்ந்துருக்காரு... மனோபாலா எதோ ரெண்டு மூணு சீனுக்கு வந்துட்டு போறாரு...

அப்புறம் தமன்னாவோட குடும்பமா வரவங்க யாரும் அவ்ளோ பெருசா கவனத்த ஈர்க்கலன்னு தான் சொல்லுவேன்... ஹிந்தி படத்துல தாத்தாவா வருகிரவர பாத்தாலே கொஞ்சம் டெரர் தாத்தா னு தோணும் இங்க ரவிச்சந்திரன்னா பாத்து அப்படி தெரியல....

ரெண்டு வரில சொல்லனும்னா ஹிந்தி ல இது ஒரு ரொமான்டிக் படம் தமிழ்ல காமெடிய மட்டுமே ரொம்ப நம்பி எடுத்துருக்காங்க....
என்னடா ஒரே மைனஸ் பயின்ட்டா சொல்றேன் னு பாக்குறீங்களா.... ஹிந்தி படம் மொதல்லயே பாத்துட்டுனால இப்படி இருக்கு.... புதுசா தமிழ்ல பாக்குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்....

இதுக்கு மேலயும் என்னத்த சொல்றது... ஆளாளுக்கு அவங்கவங்க பங்குக்கு படத்த பத்தி எழுதுவாங்க... எல்லாத்தையும் படிச்சுட்டு படத்துக்கு போகலாமா வேணாவான்னு முடிவு பண்ணிக்கோங்க....

Thursday, October 29, 2009

நாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி ?!!!


" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை !" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.

"என்ன குறை ?" ன்னு நானும் கேட்டேன்.

" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே! அதுதான் குறை !" ன்னார் அவர்.

நல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே! நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே !

நல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா ?

அதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி?

இதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.

அப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே! என்ன சொல்றீங்க ?

அவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு! எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே!

அவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.

நம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம்! அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.

அதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.

பிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.

உங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.

ஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்!!!

அடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.

"அய்யய்யோ, இப்படி பண்ணிப்புட்டீங்களே !" ன்னு ஆரம்பிகப்புடாது! தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.

"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் !" ன்னு சொல்லணும்.

உங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது! அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.

அதுக்கு என்ன பண்ணலாம்.

அவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேளுங்க;

"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க ?" ன்னு கேளுங்க! "என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.

அவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்!

ஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.

நழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும்? அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!

இன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.

சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!

அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.

ஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.

அதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும்! அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

நல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.

இதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். !!!

இப்டித்தான் இந்த வழிகள எல்லாம் என் தோழி கிட்டக்க சொன்னேன். அவ எல்லாத்தையும் முயற்சி செய்யமுடியலனாலும் கடைசி பாயின்ட்ட மட்டும் முயற்சி பண்றேன் னு சொல்லிருக்கா. அதாவது எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடறது. ஆனா பாருங்க அதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாம் ரொம்ப கோவமாகிட்டாங்க. ஏன்னு கேளுங்களேன் அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க ??!!!

------------------------------------------------------------------------------------------------------

பி.கு:
இந்த பதிவ போடுறதுக்கு மிக முக்கியக்காரணமா இருந்தவங்க போன பதிவுல நான் எழுதின
" யாருனாச்சும் நல்லவங்க இருந்தா ஒரு ஒட்டு போடுங்க" ங்கற ஒத்த வரிக்காக ஒட்டு போட்ட
ரொம்ப நல்லவங்க.

அவங்க இந்த பதிவுக்கும் நல்லவங்களாவே நடந்துக்குவாங்க னு நம்பிக்கையுடன் விடைபெரும் உங்கள்
ரசிக்கும் சீமாட்டி.

Wednesday, October 28, 2009

Ella Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் !!


இந்த பதிவுல நான் எழுத போற படம் "Ella Enchanted"... இதுவும் ஒரு பாண்டஸி படம் தான்...1997 நாவலா வந்த கதைய தான் 2004 ல படம் எடுத்தாங்க...

இந்த படத்தோட கதை இப்டித்தான் ஆரமிக்கும்.. பிரேல்ங்கற ஒரு ஊருல பிறக்கிற குழந்தை எலா.. அந்த குழந்தைக்கு லுஸிண்டாங்கற தேவதை " கீழ்படிதல்" அப்டிங்கற வரத்தை கொடுத்துருவாங்க... ஆனா நாளாக நாளாக அது வரம் இல்ல சாபம் னு எலாவுக்கு புரியும்... யாரு என்ன சொன்னாலும் அத அப்டியே செய்வா... என்னதான் அது தப்பு னு நினைச்சாலும் அதபண்ணாம இருக்கமுடியாது அவளால...
உதரணத்துக்கு சொல்லணும் னா "stay there till i come" னு சொன்னா அந்த பொண்ணால அவங்க வரவரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாதுனா பாத்துகோங்களேன்...!!!

கொஞ்ச நாள் கழிச்சு எலாவோட அம்மா செத்துபோயிருவாங்க... அவங்க அப்பா பண தேவைக்காக வசதியான இன்னொரு பொம்பளைய கட்டிப்பாரு..... அந்த பொம்பளைக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க... வெயிட் வெயிட் கதை கொஞ்சம் சின்ட்ரலா மாதிரி போகுது னு பீல் பண்றீங்களா?? நானும் அப்படி தான் பீல் பண்ணேன்... புதுசா வர ரெண்டு பொண்ணுங்களும் எலாவுக்கு இந்த மாதிரி ஒரு சாபம் இருக்குனு வந்த கொஞ்ச நாளைலயே தெரிஞ்சுக்கும்... அதுனால அவங்க இஷ்டத்துக்கு எலாவ ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுருவாங்க..

இப்ப தான் நம்ம ஹீரோ என்ட்ரி...அவரு தான் அந்த நாட்டுக்கு அடுத்த வாரிசு..... ரொம்ப சூப்பரா ஆகா ஓகோ னு அந்த ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களும் அலைவாங்க அவரு பின்னாடி ஆனா அந்த பையன் ஒன்னும் அம்புட்டு அழகாலாம் இல்லை... நம்ம ஏலாவும் அந்த இளவரசன் சார்மிங்கும் எதேட்சையா ஒரு நாள் சந்திப்பாங்க... அவங்களுக்கு ஒருதருக்குகொருதர் பிடிச்சுபோகும்.. அப்டியே பாட்டு டூயட் னு முடிஞ்சுரும்னு னு நினைக்காதிங்க... எலாவோட சித்தி பொண்ணுங்க ரெண்டும் சார்மிங்குக்கு ரூட் போடுங்க.. இதுக்கு நடுவுல எலாவ காமெடி பீஸ் ஆகுறதுக்கு ஒரு சீன் வேற வரும்...


இதுக்குமேலையும்இவங்க சொல்ரபடிலாம் ஆட முடியாது னு முடிவு பண்ற எலா தனக்கு இந்த சாபத்த கொடுத்த லுசிண்டாவ தேடி கிளம்பிருவா... ஏனாக்க வரம் கொடுத்தவங்க தான் அத மாத்தமுடியும்ல... அப்படி கெளம்பி போற எலா கூட slannen ங்கற ஒரு kulla மனிதன் கூட வருவான்... அவங்க காட்டுகுள்ள போகும்போது மனுசன சாப்டற கும்பல்கிட்ட மாட்டிக்குவாங்க.. அங்க திடீர் னு நம்ம ஹீரோ என்ட்ரி கொடுத்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துவாரு. அப்புறம் அவங்களுக்கு தானும் துணையா வரேன்னு போவாரு. அப்புறம் ஒரு ஜயண்ட்ஸ் விருந்துல கலந்துகரவங்க அப்டியே ஒரு பாட்டு பாடி டூயட் ஆடி லவ்வ ஆரம்பிச்சுருவாங்க.

அப்பாலிகா அரண்மனைக்கு வருவாங்க. அங்க நம்ம இளவரசரோட மாமா எப்டினாச்சும் சார்மிங்க போட்டு தள்ளிட்டு தானே அரசராகனும் னு ரொம்ப பக்காவா பிளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. நம்ம எலா தான் என்ன சொன்னாலும் அத அப்டியே செஞ்சுடுவால அதுனால எலாவ கூப்பிட்டு நீ தான் அவன கொல்லனும் னு சொல்லிட்டு இந்த திட்டத்த வெளில யாருகிட்டயும் சொல்ல கூடாதுனும் சொல்லிருவாரு. நம்ம எலாவுக்கு இப்ப என்ன பன்றதுனே புரியாது. அவளோட கூட வந்த குள்ளன் ஒருத்தன் இருப்பான்ல அவன கூப்பிட்டு அவள ஊருக்கு வெளில இருக்க மரத்துல கட்டிவச்சிட சொல்லிருவா. விதி யார விட்டுச்சு சும்மங்காட்டிக்கு அந்த பக்கம் வர லுஸிண்டா இவ கட்ட அவுத்து விட்டுடுவாங்க.


அப்புறம் என்ன ஆச்சு னு நீங்க படம் பாத்தா தெரிஞ்சுகோங்க.

இது வழக்கம் போல டைம் பாஸுக்கு பாக்கிற படம் தான். படத்துல பெருசா கருத்துனுலாம் ஒன்னும் இருக்காது. அப்புறம் இந்த படத்துல பாட்டுலாம் எனக்கு பிடிச்சுருந்துச்சு... உங்களுக்கு எப்படி னு தெரியல... படம் கடைசில எல்லாரும் ஒரு டான்ஸ் ஆடுவாங்க அது ரொம்ப கலர்புல்லா இருக்கும்.

பி.கு:
யாருனாச்சும் நல்லவங்க இருந்தீங்கனா ஓட்டு போடுங்க பாஸு...!!




Sunday, October 25, 2009

மூணு வாரம் கழிச்சு மூணு படம்....!!!

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்... பதிவு எழுதி கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகிடுச்சு...
நடுவுல ஏன் பதிவு போட முடியல னு சொல்றதுக்கு பெரிய கதையே இருக்கு... பயபடாதிங்க உங்ககிட்ட கதை சொல்லி மொக்க போட போறது இல்ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...

சரி மேட்டருக்கு வரேன்... இந்த பதிவுல மூணு படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன்... அந்த மூணு படத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன னு அப்பாலிக்கா சொல்றேன்...

மொத படம்

You've Got Mail

இந்த கதை நீங்க அடிக்கடி பாத்த மாதிரி தான் இருக்கும்... அதான் நம்ம ஊர் பக்கம் ரொம்ப நாள் அறைச்சங்கலே பாத்து காதல் பாக்காம காதல் னு டிசைன் டிசைனா அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் AOL Messenger ல சாட்டி( அதான் சாட் பண்ணி) விரும்ப ஆரம்பிப்பாங்க... ஆனா விதி னு ஒண்ணு இருக்கு ல... சாட் ல அவ்ளோ நெருக்கமா இருக்க இவங்க நிஜ வாழ்கை ல பிசினஸ் எதிரியா இருப்பாங்க...

நேர்ல பாக்கும் போது லாம் சண்ட போட்ற இவங்க எப்படி ஒத்து போறாங்க னு காமிக்கறது அவங்களுக்குள்ள நடக்குற வசனங்கள்ல தான்... இந்த படத்துல வசனம்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு... சாம்பிள் கு கொஞ்சம் வசனம் இங்க...
"I started helping my mother here after school when I was six years old. I used to watch her, and it wasn't that she was selling books, it was that she was helping people become whoever they were going to turn out to be. When you read a book as a child it becomes part of your identity in a way that no other reading in your life does."

"Sometimes I wonder about my life. I lead a small life. Well, valuable, but small. And sometimes I wonder, do I do it because I like it, or because I haven't been brave? So much of what I see reminds me of something I read in a book, when shouldn't it be the other way around? I don’t really want an answer. I just want to send this cosmic question out into the void. So goodnight, dear void."

படத்தோட பாத்த வசனம்லாம் இன்னும் நல்லா இருக்கும்..... ஸோ பாருங்க....!!

அடுத்த படம்

Kate & Leopold

இது ஒரு பாண்டஸி படம்... அதாவது ஒருத்தன் ஒரு பார்முலாவ கண்டுபிடிச்சு இதுக்கு முன்னாடி உள்ள நூற்றாண்டுக்கு எப்படி போறதுன்னு தெரிஞ்சுப்பான்... அப்படி இவன் போகும்போது இவன் பின்னாடியே நம்ம ஹீரோ ட்யுக்கும் அவரு காலத்த விட்டு நம்ம நிகழ்காலத்துக்கு வந்துருவாரு... அப்படி வர ட்யுக் இங்க என்ன பண்றாரு னு தான் மிச்ச சாரி சாரி மொத்த கதை ;)

இங்க வந்த ட்யுக் கேட் அப்டிங்கற பொண்ணுகிட்ட மனச பரிகொடுக்குறாறு.. அந்த பொண்ணு ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை பாக்குது.. அவ ஒரு விளம்பரத்துக்கு நடிகறதுக்காக நம்ம ட்யுக் கிட்ட கேக்கும்... அவரும் சம்மதிப்பாரு. ஆனா பாருங்க அந்த விளம்பர பொருள் அவ்ளோ தரமானதா இல்ல காசுக்காக எதுக்கு வேணா விளம்பரம்பன்னுவீன்களோ ஆச்சாக்கும் பூச்சாக்கும் னு கத்திட்டு ட்யுக் அந்த எடாத விட்டே போய்டுவாரு.. அந்த பொண்ணும் சரி போறான் விடு னு நினைக்கும் .ஆனா முடியாது... அப்பளிக அந்த பொண்ணு ட்யுக்க தேடி அவரு வாழ்ந்த காலத்துக்கு போய்டும்... அவங்க ரெண்டு பேரும் சேருராங்களா இல்லையானு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா???!!

நெக்ஸ்ட் படம்

Sleepless in Saettle


நம்ம ஹீரோ ஓர் Widower (இத எப்படி தமிழ்ல சொல்லணும் னு யாருனா சொல்லுங்களேன்) . அவரு தான் பையனோட சியாட்டல்ங்கற ஊருக்கு மனைவி இறந்த சோகத்த மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாரு. ஒரு நாள் ரேடியோல நடக்குற ஒரு கௌன்சிலிங் நிகழ்ச்சி ல அந்த பையன் பேசுறான். தன்னோட அப்பா கவலையாவே இருக்காரு அவருக்கு நீங்க எதுனா சொல்லுங்க னு நிகழ்ச்சி நடத்துற ஆன்ட்டி கிட்ட கேக்குறான். அந்த ஆண்ட்டி உங்க அப்பாவ பேச சொல்லு னு சொல்றாங்க... நம்ம ஹீரோவும் பேசுறாரு.. தான் மனைவிய அவரு எப்படி எப்பிடி லாம் நேசிச்சாரு இப்ப எவ்ளோ மிஸ் பண்றேன் ( மிஸ் பண்றதுக்கும் தமிழ்ல யாருனா சொல்லுங்க பா) னு சொல்லுறாரு...

இவரு சொன்னத கேட்ட பொண்ணுங்க நெறையா பேரு அவருக்கு லெட்டர் போடுறாங்க. அத்தனையும் ஹீரோவா விரும்புறதா சொல்லி வருது. நம்ம ஹீரோயினும் லெட்டர் போட்டவங்க தான்.ஆனா அவங்க ஹீரோவா விரும்புறதா சொல்லிருக்கமாட்டங்க. ஹீரோவோட பையனுக்கு ஹீரோயின் எழுதிருந்த கடுதாசி ரொம்ப பிடிச்சிபோகும். ஆனா ஹீரோ அதுலாம் ஒதுக்காது டா நான் என் கூட வேலை பாக்குற பொண்ணயே கட்டிக்கலாம் னு இருக்கேன் னு சொல்லுவாரு. ஆனா அந்த பையனுக்கு ஹீரோ சொல்ற பொண்ண பிடிக்காது.ஹீரோயினுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆனா அவங்களுக்கு அந்த கல்யாணத்துல எல்லாம் இருக்கு ஆனா எதோ இல்லை னு தொநிடே இருக்கும். அந்த குட்டி பையன் ஹீரோயினுக்கு ஒரு லெட்டர் எழுதும் அதாவது காதலர் தினதன்னைக்கு அவங்க தன்னோட அப்பாவ ஈபிள் டவர் ல சந்திக்கணும்னு. ஹீரோ ஹீரோயின் அன்னிக்கு சந்திச்சங்களா இல்லையா னு கிளைமாக்ஸ் பாத்துகோங்க.

சரி மூணு படத்துக்கும் உள்ள ஒத்துமை என்ன னா மூணு படத்துக்கும் ஹீரோயின் மெக் ரியான்.
என்னமோ போங்க இந்த ஹீரோயின் எதுலயும் ஹீரோயினாவே தெரியல.... அப்பிடியே கதாபாத்திரமா தான் தெரியுறாங்க னு சொல்லவந்தேன்...

அடுத்த ஒற்றுமை முதல் படமும் மூணாவது படமும் ஏற்கனவே வந்தா படத்தோட தழுவல்கள்...
You've Got Mail - A Shop Around the Corner
Sleepless in Seattle - An Affair to remember
(அங்கலாம் இந்த படம் இந்த படத்தோட தழுவல் னு சொல்லிகிறாங்க... இங்க தன் வித்தியாசமான கதை னு சொல்லி ஒரே கதையா பத்து பதினஞ்சு வாட்டி எடுக்குறாங்க)
இன்னொரு ஒத்துமை கூட இருக்கு... மூனும் ரொமான்ஸ் படம்... கொஞ்சம் பொதுவா தான் போகும்.. பொறுமை இருக்கவங்க பாருங்க...
மூணு படமும் வந்து எட்டு பத்து வருஷம் ஆச்சுங்க....


அப்பாலிக்கா மெயின் மேட்டர் ஒண்ணு இருக்குது... கே. எஸ். ரவிக்குமார் கிட்ட இருந்து எப்படி கலை படம் எதிர்பார்க்க கூடாதோ அதே மாதிரி என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க... நா எதோ பொழுதுபோக்குக்கு படம் பாக்குரவ... எனது ரசணை னு பேர் வச்சுருக்கனால எனக்கு பிடிச்ச படம் தான் போட முடியும்.. உலக தரத்துக்கு லாம் இன்னும் படம் பாக்க ஆரம்பிக்கல... மொதல்ல என் தரத்துக்கு உள்ள எல்லா படத்தையும் பாக்குறதுனு முடிவுல இருக்கேன். நான் பாத்ததுல பிடிச்சத உங்க கூட பகிர்ந்துகுரேன் அம்புட்டுதான்!!
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location