Showing posts with label கவிதை முயற்சி. Show all posts
Showing posts with label கவிதை முயற்சி. Show all posts

Sunday, December 13, 2009

நிலா - குட்டி கவிதை

கவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
இப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...
எனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...
நான் ஏற்கனவே எழுதுன

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

அப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (!!!) தெரிஞ்சுகோங்க....

என்ன தெரிஞ்சுகிட்டீங்களா.... ??!! அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...

என்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

அப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க (!!!) ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன்னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...

நான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...



நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

கொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...!!!

எதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....!!!




Saturday, September 19, 2009

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

இந்த பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் னு ரொம்ப நேர யோசைனைக்கு பின்னாடி இந்த தலைப்ப வச்சுருக்கேன்...

பொதுவா எல்லா பதிவர்களும் கவிதை எழுதுறாங்க , அட்லீஸ்ட் கவிதை முயற்சினாச்சும் எதையாச்சும் எழுதுறாங்க... நமக்கு தான் இந்த கற்பனை சக்தி லாம் இல்ல போல னு பல நாள் வருத்தபட்டுருக்கேன்(!!!)...

உக்காந்து உக்காந்து யோசிச்சாலும் அடுத்து என்ன பதிவு போடலாம் னு முடிவு பண்ண முழுசா மூணு நாள் ஆகிடும் எனக்கு.. ஆனா பாருங்க நேத்து ராத்திரி தீடிர்னு எதோ வார்த்தைல யோசிச்ச மனசு அங்கயே சுத்திசுத்தி வருது... அட இது என்ன என்னமோ கவித தோனுற மாதிரில சிம்ப்டம்ஸ் லா இருக்கு னு நானும் அடம் பிடிச்சு அந்த வார்த்தயயே முன்னாடி பின்னாடி மாத்தி மாத்தி போட்டு எப்பிடியோ நாலு வரிக்கு கவித ரேஞ்க்கு கொண்டுவந்துடோம் ல...

அந்த கொடுமைய உங்களுக்கும் சொல்றேன்...
படிச்சுட்டு கவிதையா இல்ல கவித மாதிரி னு நா போட்டுருக்க தலைப்புக்கு சரியா இருக்க னு சொல்லிட்டு போங்க...

உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....

என்னடா இப்டி திங்கருதுலயே நம்ம கற்பனை குதுர நின்னிருச்சேனு மண்டைய இன்னும் கொஞ்சம் காயவச்சு யோசிச்சப்ப தோணுனது....





உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
பிரியாணியில் போடப்படும்
பிரிஞ்சி இலை போன்று....

சுவை னு ரெண்டாவது வரில போட்டுடனாலயோ என்னவோ அடுத்த ரெண்டு வரியும் கிட்ச்சென விட்டு தாண்டவே இல்ல....

ஸ்ஸ்ஸப்பா... ஒரு வழியா நாமளும் கவிதைங்கற பேர்ல ஒரு பதிவ போட்டாச்சு...!!!


பி.கு:

படங்கள் கூகிள் உபயம்.

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location