Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, September 18, 2009

சின்ன கற்பனை கதை....


நியூட்டன் கண்ணாமூச்சி ஆடினா என்ன பண்ணிருப்பாரு..

ஒரு நாள் எல்லா சைண்டிஸ்டும் கண்ணாமூச்சி விளையாடலாம் னு முடிவு பண்ணாங்க.

அவங்க நாக்க மூக்க போட்டு பாத்ததுல அயின்ஸ்டீன் தான் முதல்ல கண்ண கட்டணும். அவரு கண்ண மூடிட்டு 100 வரைக்கும் எண்ண ஆரம்பிச்சாரு.

நியூட்டனா தவற , எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா போய் ஒளிஞ்சுகிட்டாங்க.

நியூட்டன் மட்டும் ஒரு மீட்டர் அளவுக்கு தன்ன சுத்தி சதுரம் வரைஞ்சுட்டு அயின்ஸ்டீன் க்கு முன்னாடியே நின்னுட்டாரு.

1,2,3....97,98,99,100 னு எண்ணி முடிச்ச கண்ண தொறந்து பாத்த அயின்ஸ்டீன், எதுதாப்புலயே நியூட்டன் நிக்கறத பாத்துட்டு "நியூட்டன் அவுட் அவுட்" னு குஷியாகிட்டாரு.

அசராம நின்ன நியூட்டன் " நா அவுட் இல்ல... நா நியூட்டனே இல்ல " னு சாதிச்சாறு.

இத பாத்து குழப்பமான எல்லா சைண்டிஸ்டும் இவரு எண்ண சொல்லவராறு னு பாக்க வந்தாங்க.

அப்ப நியூட்டன் சொன்னராம் " நா ஒரு மீட்டர் சதுர ஏரியா இருக்கேன்..... அதாவது நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர்...

நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர் = ஒன் பாஸ்கல் , சோ நான் பாஸ்கல் , இப்ப சொல்லுங்க பாஸ்கல் தானே அவுட் ??!!"

எல்லா சைண்டிஸ்டும் இப்டி தான் உங்கள மாதிரியே தலைல கைய வச்சுட்டு உக்கந்துட்டாங்க!!!

ஹா... வாழ்க்கைல இது மாதிரியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க.... நம்ம சிரிப்பு தான் மத்தவங்க மனசுல நம்ம அடையாளமா இருக்கும்...( இது சொந்த தத்துவம் பா ... அட நம்புங்க !!)

Wednesday, August 19, 2009

மேகத்தை துரத்தினவன்

இன்னைக்கு சுஜாதாவோட புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 1979 வருஷத்துல வந்த கதைதான்... ஆனா அத படிக்கும்போது பழைய புக் னு தோணவே இல்ல...அதுதான் சுஜாதாவோட சிறப்பு...

மேகத்தை துரத்தினவன்

நெறைய பேர் இந்த கதைய படிச்சுருப்பிங்க ... படிக்காதவங்களுக்காக ஒரு சின்ன
கதைச் சுருக்கம்...

அன்பழகன் என்கிற சாதரண மனுஷன் வாழ்கைல நடக்கிற சம்பவங்கள்... அவனுக்கே தெரியாமல் அவன் ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறான் .. போலீஸில் மாட்டிக்கொள்கிறான் ... அவனுக்கு எதிராக வாதாடும் வசந்த் அவனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தருகிறான்... அதுக்கு அப்புறம் வசந்த் மற்றும் ரத்னா அன்பழகனுக்கும் அந்த கொல்லைக்கும் தொடர்பு இல்ல னு கண்டுபிடிக்கறது மிச்ச கதை.....


இதுல வசந்த் பேசுற வசனம் ரொம்ப நடைமுறைத்தனமா( பிராக்டிக்கலா இத அப்டி சொல்லலாமா னு தெரில தப்பு சொல்லுங்க திருத்திக்கிறேன் ) இருக்கு...

"ஒரு வக்கீலுக்கு அவனுடைய கட்சிக்காரன்தான் முக்கியம். நான் கூட ஆரம்ப காலத்தில் ஜஸ்டிஸ், நியாயம் அது இதுன்னு கலர் கலரா கண்கள் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். ' சமூக நியாயம்'கிறதுக்கும் ' சட்டப்படி நியாயம்' கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். எதோ ஒரு தீபாவளி மலர்லே படிச்சேன். ' நியாயங்கள்' னு ஒரு சிறுகதை. படிச்சுப் பாருங்க ! ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு ! அவன் தேர்ந்தெடுத்தது ஒரு கட்சியை. அந்த கட்சிக்கு அவன் வாதடியாகனும். பிராஸிக்யூன், டிபென்ஸ் இரண்டு பேருக்கும் சட்டப் புஸ்தகம் ஒண்ணுதான். ஒரு புட்பால் மேட்ச் மாதிரி. ரத்னாவின் காட்சிக்கும் வசந்த் காட்சிக்கும் சில விதிகள் உண்டு. அதில் முக்கியமானது சேம் சைடு கோல் போடக் கூடாது. "


இதுல யாருக்கும் ( எந்த வக்கீலுக்கும் ) மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லன்னு எனக்குத் தோனுது. உங்களுக்கு??!!!

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location