Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Monday, September 21, 2009

தினமும் இதைப்பார்த்து நீ எந்த நிலையில் இருக்கிறாய் என அறிந்து கொள்



சிந்தனை பெருகப்பெருக, எண்ணம் உயரும் !
எண்ணம் உயர உயர, பேச்சு சுருங்கும் !
பேச்சு சுருங்கச் சுருங்க, செயல் சிறக்கும் !
செயல் சிறக்கச் சிறக்க, புகழ் கூடும் !
புகழ் கூடக்கூட, பொருள் சேரும் !
பொருள் சேரச்சேர, மகிழ்வு நிறையும் !
மகிழ்வு நிறைய நிறைய, வாழ்வு மலரும் !
வாழ்வு மலர மலர, மமதை ஏறும் !
மமதை ஏற ஏற, பேச்சு விரியும் !
பேச்சு விரிய விரிய, செயல் சுருங்கும் !
செயல் சுருங்கச் சுருங்க, புகழ் குறையும் !
புகழ் குறையக் குறைய, செல்வம் கரையும் !
செல்வம் கரையக்கரைய, வாழ்வு இருளும் !
வாழ்வு இருள இருள, சிந்தனை பெருகும் !
மீண்டும் சிந்தனை பெருகப் பெறுக ,,,

இதை யாரு எப்போ சொன்னதுன்னு லாம் எனக்கு தெரியாது...
ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது அதான் உங்க கூட பகிர்ந்துக்கலாம் னு பதிவா போட்டுடேன்..

(மொக்க கவிதைய பிரபல பதிவாக்குன நீங்க இத என்ன பண்ணுறீங்க னு பார்க்க ஆவலோட இருக்கும்
- உங்கள் ரசனைக்காரி)
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location