Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Thursday, September 17, 2009

ரயில் பயணங்களில்...


நீண்ட தூரம் ரயில் பயணம் பிடிக்காதுன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்காங்களா என்ன...??!!

எனக்கு ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.. சின்ன பிள்ளையா இருக்கும்போது குடும்பத்தோட எங்க போனாலும் எங்க அப்பா விரும்புறது ரயில்ல போகத்தான்.... அப்டி போன நிறையா பயணங்கள் இன்னும் நினைவுகள்ள ரொம்ப பசுமையா இருக்கு....

தெரிஞ்சவங்க தெரியாதவங்க னு லாம் வித்யாசம் இல்லாம சேர்ந்து போற 5 மணி நேரமோ 6 மணி நேரமோ எல்லாரும் சிரிச்சு பேசிட்டு போற அழகே தனி..
எனக்கு ரயில்ல போகும்போது நிறைய நண்பர்கள் கிடச்சுருக்கங்க.. என் வயசு நண்பர்கள் னு சொல்றத விட எல்லா வயசுலயும் நண்பர்கள் கிடச்சுருக்காங்க னு சொல்றது தான் சரியா இருக்கும்..

சுமார் பத்து வருசத்துக்கு முன்னாடி இப்டி ரயில் பயணத்துல நண்பரா கிடச்சவங்க ரவி அண்ணா மற்றும் அருண் அண்ணா... ரெண்டு பேரும் இப்ப என்ன பண்றாங்க னு தெரியாது.. அவங்க இன்னும் மனசுல இருக்கதுக்கு முக்கியமான காரணம் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ நல்லா பேசுனாங்க.. எவ்ளோ கதை சொன்னாங்க.. பொதுவா வளந்துட்டாலே குழந்தைதனத்த நாம எல்லாரும் மறந்துடுவோம்.. ஒரு குழந்தைகிட்ட எப்டி பேசனும் னு கூட பலருக்கு தெரியாது... அவங்கள பாத்துதான் குழந்தைத்தனம் வாழ்கைல ரொம்ப முக்கியம் னு புரிஞ்சது... ( இப்ப எதுக்கு இத்தன பில்ட் அப் னு நீங்க கேக்குறது தெரியுது)


போன வாரத்துல சேலத்துல இருந்து சென்னை போனேன்.. ரயில்ல தான்.. மக்கள் ரொம்ப மாறிட்டாங்க... அதிக வேலை களைப்பா என்ன னு தெரியல நான் ஏறுன கம்பார்ட்மென்டுள்ள எல்லாரும் ரயில் பொறப்பட்டு கொஞ்ச நேரத்துலயே தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்டி தூங்காத சிலரும் காதுல ஒரு மொபைலயோ எம்பி3 பிளேயரயோ மாட்டிகிட்டு அவங்க இஷ்டப்பட்ட பாட்டுகள கேக்க ஆரம்பிச்சுடாங்க... இன்னும் கொஞ்சம் டீன்ஸ் மெசேஜ் மற்றும் கால்ஸ் ( அது கடலையா னு கடவுளுக்கு தான் தெரியும் ) லா பிசியா இருந்தாங்க..

எனக்கு ரொம்ப போர் அடிச்சு கொஞ்சம் நேரம் வேடிக்க பாத்தேன்... பஸ் போறத விட ரயில்ல போறதுல்ல சின்ன சந்தோசம் என்ன னா போற வழி எல்லாம் இயற்கை காட்சிகளா பாத்துட்டு போகலாம்..


வேடிக்க பாத்துட்டே இருக்கும்போது தான் ஒரு எண்ணம் வந்துச்சு இப்டி வெட்டியா போறதுக்கு பேசாம எழுதுறதுக்கு எதையாச்சும் யோசிக்கலாம் னு நினைக்க தான் ங்க செஞ்சேன் எங்கேர்ந்து தான் தூக்கம் வந்துச்சோ அப்டியே தூங்கிட்டேன் :( ..


முழிச்சு பாக்குறப்ப ரயில் எங்க போகுது னே தெரியல.. பக்கத்து சீட்ல இருந்த அங்கிள் சொன்னாங்க ஜோலார்பேட்டை தாண்டிவந்துருச்சு னு.... ஜன்னல்ல பாத்த அரை கிலோமீட்டர் தள்ளி இருக்குற வீடு கூட பளிச்சு னு தெரியுது... வாஸ்து கலராம்... அப்பா சாமி கண்ணு போச்சு போங்க...

கண்ட கலர அடிச்சது கூட பரவால அதுக்கு பார்டெர் ப்ரைட் கலர் அடிச்சு (அதாவது ஆரஞ்சு கலர் கு கிளிபச்ச பார்டெர், வயலெட் கலர் கு பஞ்சு மிட்டாய் கலர் பார்டெர் னு ) ரொம்ப கொடுமையா பெயிண்ட் அடிச்சுருக்காங்க... அழகா வீட கட்டி இப்டி ஏன் தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ ?!!

அப்டி இப்படி னு ஒரு வழியா சென்னை வந்து சேந்துட்டேன்.. கடைசிவர எத பத்தி எழுதுறது னு யோசிக்கவே இல்ல போங்க ....!!!




இத படிக்கறவங்களுக்கு ஒன்னு புரிஞ்சுருக்கும்... இவ என்ன சொல்ல வரானே புரியல தானே உங்களுக்கு... எனக்கே அது புரியலங்க... எதோ எழுதனும் னு கஷ்டப்பட்டு இவ்ளோ டைப் பண்ணிட்டேன், வெட்டியா ட்ராப்ட் போட்டு வைக்க மனசு வரல அதன் பப்ளிஷ் பண்ணிட்டேன்... மன்னிச்சுக்கங்க எசமான் மன்னிச்சுக்குங்க....

அது என்னமோ போங்க நா சொந்தமா எது எழுதுனாலும் அது எனக்கே புரிய மாட்டேங்குது !!!

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location