எனக்கு பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... நெறைய நேரம் பாட்டு கேக்குறது வழக்கம்... படிக்கும்போது, சமைக்கும்போது, தூங்கும்போது னு இப்டி பாரபட்சமே இல்லாம எல்லா நேரமமும் பாட்டு கேக்குறது பழக்கம்..நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் சொன்னாரு "வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி " னு... அதுல இருந்து எல்லா பாட்டையும் யாரு பாடினாங்க னு தெரிஞ்சுக்கணும் னு ஒரு ஆர்வம்...
ஏன்னா நம்ம புத்திசாலி னு நம்மளயே நம்பவைக்கறது ரொம்ப கஷ்டம் பாருங்க... அப்டி ஆரம்பிச்சு இன்னைக்கு ஓரளவு எல்லா பாட்டும் யாரு யாரு படுறாங்க னு தெரியுது...
ஆனா பாருங்க பாட்டு பாடுனவங்கள தெரிஞ்சுக்குற ஆர்வத்துல்ல பாதி கூட பாட்டு எழுதுனவங்க யாரு னு தெரிஞ்சுக்கறதுள்ள இல்ல... எத்தனையோ நல்ல பாட்டு கேட்க்குறேன் ஆனா அதலாம் யாரு எழுதினாங்க னு தெரியாது..... பாடல் எழுதுற கவிஞர்கள் பேர் தெரியும் ஆனா அவங்க என்ன என்ன பாட்டு எழுதிருக்காங்க னு தெரியாது... தாமரையோட பாடல்கள் மட்டும் தான் பாடல் ஆசிரியர் பேரோட தெரியும்.. ஏன்னா அவங்க பாட்டு மட்டும் தான் கான்ஸ்டன்ட் காம்பிநேஷின் ல ஹிட் ஆச்சு, சோ கவுதம் மேனன் படம் னா தாமரை தான் பாடல்கள் னு மனசுல பதிஞ்சு போச்சு...
உங்களுக்கு எல்லா பாடல் ஆசிரியர் பேரும் தெரியுமா??
அப்ப கீழ உள்ள பாடல் வரிகள் லாம் யாரு எழுதுனது னு சொல்லிட்டு போங்க...
"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"
(பூவெல்லாம் உன் வாசம்)
" காதல் நெருப்பின் நகரம்
உயிரை உருக்கி தொடரும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் "
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்"
(வெயில்)
"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "
(சில்லுனு ஒரு காதல்)
"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே
வெள்ளன எந்திருச்சு ஓடும் பய
சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே
அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்துக்கொண்டேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"
(காதல்)
" ஒரு நாளில் வாழ்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எதனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்"
(புதுப்பேட்டை)
"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி..
இரவும் அல்லாத
பகலும் அல்லாத
பொழுதுகள்
உன்னோடு கரையுமா??!!
கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!
தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."
(சுப்பிரமணியபுரம்)
இதெல்லாம் சாம்பிள் க்கு கேட்டது... பதில் சொல்ல யாராச்சும் கிடைச்சா இன்னும் கேக்குறதுக்கு நிறைய பாடல் வரிகள் இருக்கு....
பதில் சொல்லுவிங்க தானே ??!!
































