Wednesday, July 1, 2009

படித்ததில் பிடித்தது

இந்நாள்
=======
எவ்வித பிரத்யேகமும் இன்றி
நாம் கடக்கிற
இந்த தினத்தில்
இந்த வினாடியில் ...
மழையின் தொடுதலால்
புதிய சித்திரமாகிறது வீதி!
எதிர்பாராத
கடிதத்தின் வரிகளில்
ஈரமாகிறது ஒரு கைக்குட்டை!
மறந்து விட்ட
நம் பழைய சொல் ஒன்று
யாரிடமோ இருக்கிறது... பத்திரமாக!
எவ்வித பிரத்யேகமும் இன்றி
நாம் கடக்கிற
இந்த தினத்தில்
எவரோ எழுதப்போகும்
நாட்குறிப்பில்
நம் பெயர் இருக்கலாம்
முதலாவதாய்...
கனவு
=====
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிற
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
ஆயுள் ரேகை
===============


ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோன ஆயுள்ரேகை


நிலா
====

ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலாவெளிச்சம்


காதல்
=====

உனக்கும் எனக்கும்
காதல் பிறந்தது
என்ன பெயர் வைக்கலாம்...?

நம்பிக்கை
==========

சகுனம் சரியில்லை
திரும்பி நடந்தது!
மனிதனை கண்ட பூனை!

இசை
=====

குழலினிது
யாழினிது
என்பர்
அவளது
கொலுசொலி
கேட்காதவர்

காத்திருப்பு
===========

நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்

பாசம்!
======

அன்னையர் தின
வாழ்த்து சொல்ல
கிளம்பினான்,
முதியோர் இல்லத்தில் இருந்த
அன்னையை தேடி

நீ
==

எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசு பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு...
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம் ..
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே...

கடைசி வரி
===========


பொருளற்று கழிந்து கொண்டிருக்கும்
பொழுதுகளின்
இறுதியில்
வந்து விடுகிறாய்
நீ
கவிதையின்
கடைசி வரி போல...

பரிசு
====

உன்
பிறந்த நாள்
எதை
பரிசளிப்பேன்
உன்னை விட
அழகாய்.

0 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location