Saturday, December 19, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் காத்திருக்கு...

என்னையும் மதிச்சு ஒரு பதிவர் அவார்ட்லாம் கொடுத்துருக்காங்க...

அவங்க கொடுத்த அவார்டுகள பகிர்ந்துக்கணும்ன்னு பிரியப்படுறேன்..!!

பட்டாம்பூச்சி அவார்டும் பிளாக்கர் எக்ஸ்செல்லன்ஸ் அவார்டும் யாரு யாருக்குன்னு அடுத்த பதிவுகள்ல சொல்றேன்...

இப்பதைக்கு கமெண்ட் கிங்/க்வீன் அவார்ட் யாருக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ண தான் இந்த பதிவு...

இந்த அவார்ட் உங்களுக்கும் கிடைக்கணும்னா பெருசா லாம் ஒன்னும் பண்ண வேணாம்... கீழ உள்ள படத்த பாத்துத்துட்டு உங்க மனசுல என்ன தோணுதோ அத பட்டுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...


எந்த கமெண்ட் நச்சுன்னு இருக்குன்னு "அவார்ட் கமிட்டி பீல் பண்ணுதோ (நானும் நண்பர்களும்) அவங்களுக்கு ஒரு சுபயோகா சுபதினத்தில் விருது அறிவிக்கப்படும் என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
ரசிக்கும் சீமாட்டி. :)


ரெடி ஸ்டெடி கோ........

Thursday, December 17, 2009

பின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்

ஒரு மனிதனுக்கு ரொம்ப ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவனுக்கு பிரைன் ட்யுமார் ன்னு சொல்லி மருத்துவமனைல சேர்க்குறாங்க. அவன குணப் படுத்த எவ்ளவோ முயற்சி பண்ற மருத்துவர்கள் நம்ம தமிழ் சினிமால வராப்புல அவர இனிமே காப்பாத்த mudiyathu ன்னு கண்ணாடிய கலட்டி தொடச்சுகிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கூட இல்லாம அந்த மனுஷன் செத்துபோய்டுவான். அவன் செத்து போனத நினச்சு நினச்சு அவனோட மனைவி ரொம்ப அழுவாங்க. அதுக்கு அப்புறம் எல்லா காரியங்களும் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போவாங்க.

வீட்டுல புருஷனோட பீரோவ எதோ எடுக்குறதுக்காக திறக்கும்போது அதுக்குள்ளார ஒரு கவர் இருக்கும். சென்ட் அட்ரெஸ்ல மனைவி பெயர போட்டு. நமக்கு என்னத்துக்கு இவரு லெட்டர் எழுதி இருக்காரு அப்டின்னு அந்த பெண் அத திறந்து பாத்த அதுக்குள்ளே சிலபல மாத்திரைகளும் ஒரு கடிதமும் இருக்கும்.

"இந்த மாத்திரிகளை சாப்பிடும்மா. ரொம்ப நேரம் அழுதா உனக்கு ஜலோதோஷம் பிடிச்சுக்கும்"
ன்னு அந்த கடிதத்துல இருக்கிற வரிகள பாத்ததும் அந்த மனைவி அப்டியே ஒடஞ்சு அழுதுருவாங்க.


இதுல இருந்து என்ன தெரியுது???!!!!


மேல சொன்ன நாலு பத்தி கதைய மையமா வச்சு வந்த படம் தான் "P.S. I love You".


கணவன் மனைவியா இருக்கிற ஒவ்வொரு நாளும் சண்ட போட்டுகிட்டே இருக்காங்க ஹீரோவும் ஹீரோயினும். பிரிவு அவங்கள எப்பிடி பொரட்டி போடுது அப்டின்றது தான் கதை.

தான் இறந்து போனாலும் தன்னோட பிரிவு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்குற ஹீரோ கடிதங்கள் மூலமா அவங்களோடவே இருக்கிற மாதிரி காமிச்சுருப்பாங்க.
இந்த கடிதத்துக்கு அப்புறம் இந்த கடிதம்ன்னு ஹீரோ ஆர்டர் பண்ணி வச்சுருக்கதுலயே தான் மனைவி ஒவ்வொரு செயலையும் எப்பிடி செய்வா,இதுக்கு அவளோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்ன்னு ஹீரோ மனைவிய அவ்ளோ புரிஞ்சுவச்சுருப்பாறு.


தன்னோட மனைவிய தனிமைல விட்டுற கூடாது அப்பிடிங்கற எண்ணம் அவரோட ஒவ்வொரு கடிதத்துளையும் தெரியும். P.S. I love You ன்னு எல்லா கடிதத்துளையும் அவரு எழுதிருக்குறது அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆறுதலா அதேசமயம் இப்பிடி நம்மள நேசிச்சவன் விட்டுட்டு போயிட்டானேன்னு பீல் பண்ண வைக்கும்.


படம் பாக்க ஆரம்பிக்கும்போது ஒருவித சுவாரசியம் இல்லாம தான் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இந்த படம் எனக்கு பிடிச்சுச்சு.

பொழுதுபோக்குக்காக படம் பாக்குறவங்களுக்கு இது போர் சினிமாவ இருக்கும். கதைல ஒன்றி படம் பாக்குற டைப் னா மே பி உங்களுக்கும் பிடிக்கலாம். :)


ஓட்டு போடுங்க மக்களே!!

Monday, December 14, 2009

இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்

நெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..
எனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல்லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...

ஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு... அதுனால எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...

அதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்!!!

சரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது "இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் " அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...
அவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா!! (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...!!)

எதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..

வீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...


"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...

அவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....!!


இங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...

அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....

இந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...


அப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......




உங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....!!!
கண்டிப்பா பாருங்க....


ஓட்டு போடுங்க மக்களே!!!

Sunday, December 13, 2009

நிலா - குட்டி கவிதை

கவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
இப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...
எனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...
நான் ஏற்கனவே எழுதுன

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

அப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (!!!) தெரிஞ்சுகோங்க....

என்ன தெரிஞ்சுகிட்டீங்களா.... ??!! அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...

என்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

அப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க (!!!) ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன்னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...

நான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...



நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

கொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...!!!

எதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....!!!




உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location