Saturday, August 15, 2009

நகரத்தார் சங்க பாதயாத்திரை--குருந்தமலை முருகன்

வணக்கம்....
கோவை பதிவர்கள் யாரவது குருந்தமலை முருகன பத்தி எழுதிருபங்க னு நினச்சேன்... இன்னும் யாரும் எழுதலைங்க...

நான் எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டுபோரேன்...

கோவை நகரத்தார் சங்கத்துல இருந்து வருஷாவருஷம் நெறைய பேர் குருந்தமலைக்கு பாதயாத்திரை போறாங்க... சுமார் ஒரு 35km நடைபயணம்...

இந்தவருஷம் 17 ஆம் ஆண்டு பாதயாத்திரை... இத ஒட்டி ஒரு புக் வெளியிட்டாங்க.... எனக்கு இது தாங்க முதல் வருஷம் ..

இந்த தரவை ௨௮ பேர் காவடி எடுத்தாங்க...

14.8.09 3.30 மணி அளவுல வேல் பூஜை ல ஆரம்பிச்சு நாலரை மணிக்கு லாம் எல்லாரும் நடக்கஆரம்பிச்சு ....


வேல் பூஜை
படங்கள்












8 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம் லயன்ஸ் கிளப் ல எல்லாருக்கும் பலகாரம் கொடுத்து , சாமி ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்துச்சு...

இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறபிச்சவங்க விப்ரோ வீரப்பன் அவர்களும் அவங்க துணைவியாரும் அப்பறம் சிடிஎஸ் சிதம்பரம்...

ஊஞ்சல் சேவை





ஊஞ்சல் சேவைய முடிச்சுட்டு நடக்க ஆரம்பிச்ச நாங்க 15 ஆட தேதி காலைல 7 மணிக்கு குருந்தமலை சந்நிதானத்த சேந்தாச்சு... ரொம்ப திருப்த்தியா சாமி தரிசனம் முடிச்சு ஊருக்கு வந்துடோம்...


குருந்தமலை முருகன்


காவடிகள்


நாங்க சீக்கிரமாவே கிளம்பிடனால மதியம் நடக்க இருந்த அபிஷேகத்தையும் உரையையும் மிஸ் பண்ணிடோம் னு ஒரு சின்ன வருத்தம் இருக்குங்க !!

Thursday, August 13, 2009

கவிதைங்கோ !!

குடும்பம்


கருவரையில் கடுகளவு

இருந்த என்னை

கருத்தூண்றி வளர்த்தவளே..

என் தாயே..

கண்டித்து வளர்த்தாலும்

கண் இமை போல

என்னை காத்தவரே..

என் தந்தையே..

வம்புக்கும்

பஞ்சமில்லை..

அன்புக்கும்

பஞ்சமில்லை..

தோழியான சகோதரியே..

வழிகோலுங்கள்..

உங்களை போல்

என்னை காதலிக்கும்

என்னவளும்

நம் குடும்பம் எனும்

கவிதை கூண்டுக்குள்

வர...

இந்த கவித என் நண்பனோடது.... அந்த வலைபக்கத்த பாக்க இங்க கிளிக்குங்க

http://kirukargalpakkam.blogspot.com

குளிக்கறது ஒரு சொகம்ங்க....!!

















நீங்க வேற எதையாவது நினச்சு வந்துருந்தா சாரி மன்னிக்கணும் ....!!!

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்








Wednesday, August 12, 2009

வெற்றி வெற்றி வெற்றி...

வணக்கம் வணக்கம் வணக்கம்...

எவ்ளோ நாள் தான் அடுத்தவங்க எழுதுனதயே பிட் அடிச்சு போட்றது...
நானே ஒரு பதிவு போடலாம் னு முடிவு பண்ணிடேங்க...
என்ன எழுதுனாலும் படிக்க ஆள் இருப்பாங்க னு ஒரு நம்பிக்கைதான்..

நான் பாத்த வரைக்கும் எல்லா பதிவர்களும் 3 விசயத்துல தான் ங்க அதிகமா எழுதுறாங்க...
1. கவிதை( நெறைய காதல் கவித தான் இருக்கு )
2. கதை ( சிறுகதை, தொடர்கதை னு நெறைய இருக்கு )
3. விமர்சனம் ( சினிமா , தொல்லைகாட்சி ,புத்தகம் னு எல்லாத்துக்கும் )

இது 3 பிரிவுல தப்பிச்சுருச்சு னா இளைய தலைவலி , புரட்சி தலைவலி னு யாரையாவது கலாய்க்குறாங்க.....

யோசிச்சு பாத்ததுல இந்த காதல் கவித லாம் எழுதுற அளவுக்கு காதல் வசப்படல... கதை லாம் எழுதுற அளவுக்கு பொறுமை இல்ல....
பேசாம எத பத்தியாவது விமர்சனம் வரிசைல எழுதிருலாம் னு முடிவு பண்ணிடேங்க...

அந்த விமர்சனத்தோட உங்கள சந்திக்கிரேங்க... அதுவரைக்கும் எல்லாரும் இந்த வலைபக்கத்து மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோங்க....

வர்ட்டா......


என்னடா தலைப்புக்கும் சேதிக்கும் சம்பந்தமே இல்லன்னு யோசிகிறிங்க னு தெரியுது... வெற்றிகரமா முதல் பதுவு எழுதிட்டேன்... அதுக்கு தான் அந்த தலைப்பு....
எப்பூடி ??!!!


மறந்துறாம பின்னுட்டம் போட்ருங்க !!!!

சிரிக்க கூடாது!!!




ஒரு மனுஷனுக்கு தான் பெண்டாட்டிக்கு காது கேக்காம போயிருச்சோ னு சந்தேகம் வந்துச்சு...

ஆனா அவ கிட்ட வே எப்டி கேக்குறது னு யோசிச்சு பாத்தான்... எதுக்கும் டாக்டர் கிட்ட ஒரு வார்த்த கேட்கலாம்-னு போனான்...

அந்த டாக்டர் இதுக்கு சிம்பிள் ஒரு வழி இருக்கு னு சொன்னாரு... "நான் சொல்ற படி செய் அவ கிட்ட இருந்து ஒரு 40 அடி தள்ளி நின்னு பேச்சு கொடு, பதில் வரல னா, 30 அடி கிட்ட போ , அப்புறம் 20 அடி இப்டியே அவ பதில் சொல்ற வரைக்கும் கேட்டுட்டே இரு"

அவனும் அன்னைக்கு சாயந்தரம் அவன் பெண்டாட்டிக்கு 40 அடி தள்ளி நின்னு "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...

பதில் இல்ல.

சரி னு இன்னும் கொஞ்சம் பக்கத்துல (30 அடிகிட்ட ) போய் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...

பதில் இல்ல.

இன்னும் பக்கத்துல போய் ( 20 அடிகிட்ட ) "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...

இன்னும் பதில் கிடைகல.


10 அடி இடைவெளி போய் கேட்டான் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?"

அட. இன்னும் பதில் வரல.

சரி தான் போ னு நினைச்சுகிட்டு அவ பக்கத்துலயே போய் கேட்டுட்டான் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு...

;

;

;

;

;

" யோவ் அஞ்சாவது தரவயா சொல்லிட்டேன், பிரியாணி !"


இதுனால நான் சொல்ல வரது என்ன னா:
-------------------------------------------------
ப்ரெச்சனை-ங்கறது எப்பவுமே நாம நினைக்கிற மாதிரி அடுத்தவங்க கிட்ட இல்லைங்க... முக்கா வாசி நேரம் நம்ம கிட்ட தான்...!!!

*********************************************************
பி. கு: தமிழ் படுத்துனது மட்டும் தான் நான். நல்ல இல்ல னா திட்டிடுங்க. கோச்சுக்க மாட்டேன்.

Monday, August 10, 2009

DANGEROUS DRAWINGS ???













Oh god.. Kids' letters to God













Origami Wonders.....!!!

Origami (from oru meaning "folding", and kami meaning "paper") is the traditionalJapanese art of paper folding. The goal of this art is to create a representation of an object using geometric folds and crease patterns preferably without the use of gluing or cutting the paper, and using only one piece of paper.

These objects are some of the wonderful Origami creations...























உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location