Thursday, July 16, 2009

படித்ததில் பிடித்தது - III

காதல்!
======

காதலுக்குத் தான்
மதிப்பு அதிகம்
வள்ளி திருமணம்
அளவுக்கு
பிரபலமடையவில்லை
தெய்வானையின்
திருமணம்!!
**************************************************************


தூங்க வேண்டுமாம்
கண்கள் அழுகின்றன
நான் என்ன செய்ய?
முறையிட வேண்டியது
உன்டமல்லவா!!

****************************************************************

எங்கே!!
=======

குழந்தைகளிடம்
சொல்வதற்கு
நிறையக் கதைகள்
காத்துக் கிடக்கிறது
தாத்தாகளைத்தான்
காணோம்....!!


***************************************************************

செய்யும்
தெய்வமே
தொழில்

சிற்பிக்கு!!


***************************************************************

முகவரி!!
=========

ஜன்னலிலும்
கதவிடுக்கிலும்
கத்திக் கத்தி
ஓய்ந்த குருவிக்கு
கடைசி வரை
சொல்லப்படவேயில்லை
நேற்றுவரை அந்த
வீட்டில்
குடியிருந்த
குழந்தைகளின்
புதிய வீட்டு முகவரி!

***************************************************************

0 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location